Monday, October 14, 2019

மக்கள் மீது அடுத்த சுமை! ஜனாதிபதி தெரிவாகி மூன்று மாதத்தில் பொதுத்தேர்தல்....!

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அடுத்த வருடம் (2020) மார்ச் மாதத்தின் பின்னர் பொதுத்தேர்தல் நடாத்தப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனாதிபதி தெரிவாகி மூன்று மாதங்கள் கடந்ததும் ஜனாதிபதி பொதுத்தேர்தலை நடாத்தவியலும்.

இதற்கமைய ஜனவரி மாதத்தில் முன்வைக்கப்படவிருந்த என்றாலும் பின்போடப்பட்ட 2020 வரவு செலவுத் திட்ட அறிக்கை மார்ச் மாதத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய ஜனாதிபதி மற்றும் அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்திற்குத் தேவையானவாறு வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதே எதிர்பார்க்கையாகவும் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்ததன் பின்னர் பாராளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. 19 ஆவது அரசியலமைப்பில் அதற்கான அதிகாரம் காணப்படுகின்றது.

அதற்கேற்ப, 2015 ஆகஸ்ற் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிகாரத்திற்கு வந்த இப்பாராளுமன்றத்திற்கு நான்கரை ஆண்டுகள் எதிர்வரும் 2020 மார்ச் மாதம் நிறைவுபெறுகின்றது. அதனால் இவ்வருட நவம்பவர் மாதம் 16 ஆம் திகதி தெரிவுசெய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதி, எதிர்வரும் 2020 மார்ச் மாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.

No comments:

Post a Comment