Wednesday, October 9, 2019

கோத்தாவுக்கு எதிராக நீதிமன்றில் இடைக்காலத் தடையுத்தரவு....? சஜித் போட்டியின்றி வெற்றியீட்ட முனைவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் இலங்கைப் பிரஜாவுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்வை மீண்டும் ஒருமுறை உச்ச நீதிமன்றில் முன்வைப்பதற்கு மனுதாரர் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஆவன செய்யப்பட்டுவரும் இத்தருவாயில், கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தடையுத்தரவொன்றைப் பெற்றுக்கொள்ள மனுதாரரான சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட இருவரும் தீர்மானி்த்துள்ளனர்.

அவ்வாறான தடையுத்தரவினைப் பெற்றுக்கொண்டால் சஜித் பிரேமதாச போட்டியின்றி வெற்றியீட்டுவார் என அவர்கள் நம்பியுள்ளனர்.

No comments:

Post a Comment