Wednesday, October 9, 2019

கைது செய்யப்பட்டுள்ள சகல படையினரையும் விடுதலை செய்வேன்.. கோத்தா

நாட்டுக்காக தமது உயிரை பணயம் வைத்து போராடிய இராணுவத்தினர் நல்லாட்சி என்று சொல்லப்படும் ஆட்சியில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தான் வெற்றிபெற்றால் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச.

பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரச்சாரம் தற்போது அனுராதபுரத்தில் இடம்பெற்றுவருகின்றது. மாலை 3 மணிக்கு ஆரம்பமான குறித்த பிரச்சார மேடையில் பேசியபோதே அவர் மேற்கண்ட உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

அத்துடன் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்றும் 22 வருடங்களுக்கு மேல் சிவில் பாதுபாப்பு சேவையில் ஈடுபட்டுவந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவதாக மஹிந்த ராஜபக்ச அவர்கள் மேற்கொண்டிருந்த முன்மொழிவை ஆட்சிக்கு வந்தவுடன் தாமதமின்றி செயற்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற இவ்வாரம்ப தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




No comments:

Post a Comment