Sunday, October 20, 2019

பேராயரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக கோத்தபாய அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் தேடுதல் நடாத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு ஆவன செய்யப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (19) பிற்பகல் நீர்கொழும்பு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டுள்ளார்.

சிறந்த பார்வை - பணிபுரியும் நாடு எனும் தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாபெரும் கூட்டமொன்றும் கிரிபத்கொடையிலும், ராகமையிலும் இடம்பெற்றன. அக்கூட்டங்களிலும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டுள்ளார்.

No comments:

Post a Comment