Tuesday, October 8, 2019

பொய்யான தகவல் வழங்கிய கோட்டை பொலீஸ் அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்

பொய்யான தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்றை கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு அனுப்பி வைத்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு குறித்து பொய்யான மற்றும் உறுதிப் படுத்த முடியாத தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று கடந்த 02 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைகளில் தெரியவந்த விடங்களுக்கு அமைய பொய்யான தகவல்கள் அடங்கிய கடிதத்தை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்படும் பிரதான பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கோட்டை பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment