Saturday, October 19, 2019

கோத்தாவின் வெற்றிக்காக அலி சப்ரியும் உதய கம்மன்பிலவும் மெல்போனுக்குப் பறக்கவுள்ளனர்!

'2020 கோத்தபாயவுடன் இலங்கையின் எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் மிக முக்கிய உரையொன்று இம்மாதம் 20 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெறவுள்ளது.

மெல்போன் நகரின் டீக்கின் பல்கலைக்கழகத்தின் பர்வூட் கலாசலையில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கையின் அரசியல், சட்டம், சமூக பொருளாதார துறைகளை உள்ளடக்கும் வகையில் உரை நிகழ்த்தப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில, ரியர் அத்மிரால் சரத் வீரசேக்கர, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளன இந்நிகழ்ச்சியை மெல்போர்னில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இலங்கையர்களின் உதவியைப் பெற்றுக்காெள்ளும் நோக்கிலேயே உலகில் அதிகமாக வெளிநாட்டில் இலங்கையர்கள் வசிக்கும் மெல்போன் நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ...............................

No comments:

Post a Comment