Wednesday, October 2, 2019

பெசில் - மைத்திரி சந்திப்பு தீர்மானமின்றி முடிவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்று பொதுஜன பெரமுன ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் மாற்றுக் கருத்துக்களுக்குக் காரணமாக உள்ள மொட்டு இலச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவுக்குமிடையே விசேட சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியையும், பெசில் ராஜபக்ஷவையும் தவிர வேறு எந்தவொரு நபரும் அச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது.

தாமரை மொட்டுத் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும், கடைசியில் எந்தவொரு தீர்மானமும் இன்றி இருவரும் சென்றதாகவும் மேலும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment