Friday, October 11, 2019

மதுமாதவ மீண்டும் கட்சியினுள் இணையவந்தால் அதுபற்றிச் சிந்திப்போம்! - கம்மன்பில

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவராகச் செயற்பட்ட மதுமாதவ அரவிந்த பகிரங்கமான முறையில் முஸ்லிம்களுக்கு எதிராக காெடூர வார்த்தைகளைக் கக்கியதன் காரணமாக, பின்னர் அதன் விளைவை எண்ணி கட்சியிலிருந்து விலகினார் எனவும், இதற்கு முன்னரும் இவ்வாறான விடயங்கள் ஏனையோர்களால் நடைபெற்றிருக்கின்றன எனவும், அவ்வாறு நடந்துகொண்டவர்கள் ஒருபோதும் கட்சியிலிருந்து விலகிச் செல்லவில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நேற்று (10) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கம்மன்பில இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கும்போது,

அவர் சீரிய முறையில் தன்னால் ஏற்பட்ட குறையை எண்ணி வருந்தி, அதன் முழுப்பொறுப்பையும் தானே எடுத்துக்கொண்டு எங்களுடன் வாத விவாதங்களில் பங்குகொள்ளாது, தேர்தல் காலத்தில் கட்சிக்கு ஏற்பட்டு களங்கம் தொடர்பில் கவலை காெண்டுள்ளார். எனவே, அவர் தொடர்பில் மீண்டும் மீண்டும் கருத்துக்களை முன்வைத்து அவர்மனதைப் புண்படுத்த நாம் விரும்பவில்லை.

என்றும் நாங்கள் அவருடன் ஒன்றிணைந்தே இருந்தோம்... அவர் மீண்டும் கட்சிக்குள் இணைய வேண்டும் என்று விரும்பினால் நாங்கள் அதனைத் தட்டிக்கழிக்க மாட்டோம். அதுதொடர்பில் சிந்தித்து நல்ல முடிவை எடுப்போம்... எனவும் கூறினார்.

No comments:

Post a Comment