Tuesday, October 22, 2019

ஸஹ்ரான் பயன்படுத்திய 'திரிமார்' தொழிநுட்பம் இலங்கையில் இல்லை - புலனாய்வுப் பிரிவு

தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் சிரியாவிலுள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் 'திரிமார்' தொழிநுட்பத்தின் மூலமே தொடர்புகளை மேற்கொண்டு வந்துள்ளான் எனவும் அந்தத் தொழிநுட்பம் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர்களின் பார்வைக்கு உட்படாது எனவும் இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கணனி இணையத்தளத்திற்குள் உள்நுழையவோ, அதனது செயற்பாடுகளைக் குறைக்கவோ இலங்கையில் அதற்குரிய தொழிநுட்ப வசதிகள் இல்லை என உயர் பாதுகாப்புத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த திரிமார் தளத்தைத் தடைசெய்வதற்கு புரோகோல் சர்வதேச பொலிஸாரால் கூட இதுவரை முடியாதுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபூபக்கர் அல் பக்தாத் என்பவனும் திரிமார் தளத்தின் மூலம் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றான் என மேலும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment