Thursday, October 3, 2019

கோத்தாவுக்கு எதிராக மனு அளித்தவரின் துகிலுரியப்படுகிறது!

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்படும் அரசியல் பகடைக்காயாக மாறியுள்ளார் என அவரின் சகோதரரான இந்திரநாத் தேநுவர இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

"பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர தற்போது செய்துள்ள காரியத்தை இதற்குச் சில நாட்களுக்கு முன்னர்
செய்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்திருந்தால் அவர் நான் துதிபாடும் வீரராக இருந்திருப்பார். இறுதியாக அவர் செய்துள்ள செயல் தார்மீகமான செயல் அன்று.

ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு போட்டியாகும். எதிர் தரப்பின் கால்களை உடைப்பதற்கு இடமளிக்க இயலாது.

போட்டியிட்டுத்தான் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றிபெறுவோரே உண்மையான வீரர்கள்."

No comments:

Post a Comment