Saturday, October 12, 2019

கிளிநொச்சி அம்பாள்குளம் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

திருமலையில் நேற்றிரவு கைதான கிளிநொச்சி அம்பாள்குளம் இளைஞனின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன.

முன்னாள் புலி உறுப்பினரான அவனிடம் மெற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்று கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

குறித்த வீட்டில் கைதானவரின் மனைவி மற்றும் பிள்ளை தங்கியிருந்தனர். கிளிநொச்சி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்தே வீட்டை சோதனைக்குட்படுத்தினர்.

இதன் போது ரி56 ரக துப்பாக்கி 1, சிறிய ரக துப்பாக்கிகள் 3, கைக்குண்டுகள் 5, ரி 57 துப்பாக்கி ரவைகள் 154, சிறிய ரக துப்பாக்கி ரவைகள் 45, மடிக் கணிணி 1, தொலைபேசிகள் 4, எம் கே.எம் ஜி ரவைகள் 6, வெடிப்பு கருவிக்கான வயர்கள், வெடிப்பு கருவிகள் 4, ஜிபிஎஸ் 1, தானியக்கிகள்,கமரா உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment