Friday, October 11, 2019

மங்களவுக்கும் ஐதேகவுக்கும் எதிராக மைத்திரி வழியில் சஜித்....

போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

தான் ஜனாதிபதியான பின்னர், போதைப் பொருள் வியாபாரிகளுக்குத் தண்டனை வழங்குவேன் என நேற்று (10) காலி முகத்திடலில் இடம்பெற்ற மாபெரும் கூட்டத்தின்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சிகூட, மரண தண்டனைக்கு எதிராக கட்சி என்ற முறையில் எழுந்துநிற்பதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ளார்.

No comments:

Post a Comment