Friday, October 11, 2019

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 75% அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 75% அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சேமரத்ன விதான பதிரண தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் சுமார் 72 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இந்த தேர்தலில் 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் அதில் 72 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இன்று இரவு 10 மணி அளவில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment