Sunday, October 20, 2019

இலங்கையில் 3582 பேருக்கு எலிக்காச்சல் சுகாதார திணைக்களம்

இலங்கையில் 3582 பேர் எலிக்காச்சலால் பீடிக்கப்பட்டள்ளனர் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக இத் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது எனவும் சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதில் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 780பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாடளாவியரீதியில் 3582பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் 780பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கணிப்பீட்டின் பிரகாரம் களுத்துறை மாவட்டத்தில் 460பேர் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் காய்ச்சல் கண் சிவத்தல் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment