Saturday, September 28, 2019

SLFP யின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய இறுதித்தீர்மானம் திங்கட்கிழமை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையிலேயே அந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment