Friday, September 27, 2019

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதிலிருந்து 'SLFP' பின்வாங்குகிறது!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுங்கி நிற்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையை இல்லாதொழிப்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டபாேதும், பாராளுமன்றம் அது தொடர்பில் கருத்திற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதனால் ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஒதுங்குவதாகவும், அதனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு ஆதரவளிப்பதில்லை என்று குற்றம் சுமத்தக் கூடாது எனவும் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது திசாநாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment