உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த, பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புவைத்திருந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள வியாபாரியை, எதிர்வரும் 18 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் ரங்க திசாநாயக்க ஆணையிட்டார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் சட்டத்தின் பிரகாரம் 30 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று குறிப்பிட்ட நபரை நீதிமன்றத்தில் ஒப்படைத்த போதே, நீதவான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதற்கேற்ப, இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர் மட்டக்களப்பு - காத்தான்குடியைச் சேர்ந்த அஹமட் மொஹமட் அர்ஷாத் எனும் வியாபாரியாவார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஓட்டலில் இடம்பெற்ற தாக்குதல் நடாத்திய குண்டுதாரிகள் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஏற்பவே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறித்த சந்தேகநபரை நீமின்றில் ஆஜர்படுத்தினர்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் சட்டத்தின் பிரகாரம் 30 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று குறிப்பிட்ட நபரை நீதிமன்றத்தில் ஒப்படைத்த போதே, நீதவான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதற்கேற்ப, இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர் மட்டக்களப்பு - காத்தான்குடியைச் சேர்ந்த அஹமட் மொஹமட் அர்ஷாத் எனும் வியாபாரியாவார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஓட்டலில் இடம்பெற்ற தாக்குதல் நடாத்திய குண்டுதாரிகள் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஏற்பவே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறித்த சந்தேகநபரை நீமின்றில் ஆஜர்படுத்தினர்.
No comments:
Post a Comment