Friday, September 20, 2019

கோத்தபாயவுக்கான வேட்பாளர் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சனநாயக சோசலிஸ குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்காக, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் சற்று முன்னர் செலுத்தியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, அவரது இரட்டை பிரஜா உரிமை காரணமாக போட்டியிட முடியாது என்ற கருத்தாடல்கள் நிலவி வந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத் தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும், அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப் பகுதியில் வேட்பாளர் மனுத் தாக்கல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோத்தபாயவால் போட்டியிடமுடியுமா என்ற கேள்விகள் இன்றும் மக்கள் மத்தியில் தொடங்கியுள்ள நிலையிலேயே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment