பங்காளிக் கட்சிகளுடன் சஜித் சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று தீர்மானமிகு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இன்றிரவு 8 மணிக்கு பின்னர் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்..
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த சந்திப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
இது ஒரு பகிரங்க கலந்துரையாடல் எனவும், தற்போதைய நிலையில் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பது மிக முக்கிய பணியாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment