Wednesday, September 11, 2019

தாயின் சடலத்துடன் மகன் மாயம். பொலிஸார் பொதுமக்கள் வலைவிரித்து தேடுகின்றனர்.

வட்டவலை பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டம் ஒன்றில் மரணமடைந்த தனது தாயின் சடலத்துடன் அவரது மகன் மாயமாகியுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேகம் அடைந்துள்ள மக்கள் பொலிஸாரிடம் முறையிட்டு தலைமறைவான நபரை தேடி வலை விரித்துள்ளனர்.

70 வயதுடைய ராகை என்ற பெண்மணி தோட்டத்தில் இறந்ததை தொடர்ந்து அவரது சடலத்துடன் மகன் முச்சக்கர வண்ணி ஒன்றில் மாயமானதாக தோட்டத்தை சேர்ந்த மக்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து குறித்த பெண்மணி கொலை செய்யப்;பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடும் மக்கள் சந்தேக நபரை தேடி வலைவிரித்துள்ளனர்.

No comments:

Post a Comment