Tuesday, September 10, 2019

தோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்

நீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தோட்டத் தொழிலாளியின்உடலை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கம் செய்தமைக்காக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெருமவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகமை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறந்த தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் உடலை குறித்த இடம் ஒன்றில் அடக்கம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது.அங்கீகரிக்கப்படாத நிலப்பகுதியில் சடலம் ஒன்றை அடக்க செய்வதாக கூறி தோட்ட நிர்வாகம் நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவையும் பெற்றிருந்த. இந்த நிலையில் பிரதி அமைச்சர் துணிந்து நின்று அதே இடத்தில் உடலை அடக்கம் செய்துள்ளார். இதனால் நீதி மன்ற உத்தரவை மீறி உடலை புதைத்த குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு எதிராக இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் பாலித தேவரப்பெரும உட்பட 6 பேருக்கு இவ்வாறு நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment