Monday, September 9, 2019

புலனாய்வுத்துறை மீதான குற்றச்சாட்டுக்களை ஜேபிவி யின் மேடையில் நின்று நிராகரிக்கின்றார் முன்னாள் பிரதி பணிப்பாளர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து புலனாய்வுத் பிரிவினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக முன்னாள் புலனாய்வு பிரிவின் பதில் பணிப்பாளர் கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் இயக்கத்தின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தேசிய பாதுகாப்புக் கொள்கை ஒன்று நடைமுறையில் இல்லைமையே பிரதான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை, புலனாய்வு அதிகாரிகள் அசமந்தமாக செயற்பட்டிருந்தாலும் அதன் பின்னர் செயற்பட வேண்யவர்கள் தங்கள் பொறுப்பை புறக்கணித்துள்ளதாக கொலோன் கூறினார்.

உளவுத்துறையின் கவனயீனத்தால் இதுபோன்ற பேரழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதை தான் முற்றாக புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் உத்தரவுகளை நிறைவேற்ற உளவுத்துறையினர் கடமைபட்டுள்ளதாகவும் ஆனால் இந்த தாக்குதல் குறிப்பிட்ட ஒருவரின் தேவைக்காக நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறு இல்லாவிடின் எந்தவொரு உளவுத்துறை அதிகாரிக்கும் இந்த தாக்குதலை நடத்த வேண்டிய அவசியமில்லை இருக்கவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment