Friday, September 20, 2019

பிரச்சாரங்களுக்காக அரச சொத்துக்கள் பயன்படுத்துவதற்கு தடை! தேர்தல் ஆணையாளரின் அதிரடி வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத் தேர்தல் நிறைவடையும் வரை அரசியல்வாதிகளின் சில செயற்பாடுகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார்.

இதற்கமைய இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், அரச நிறுவனங்களுக்கான புதிய நியமனங்களுக்கு தடைவிதிக்கப்படவுள்ளது.

எனினும் மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்ற குறிப்பிட்ட மிக முக்கியமான நியமனங்களை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவ்வாறான நிகழ்வுகளுக்கு குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களே தலைமை தாங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment