Monday, September 2, 2019

பேராசிரியர் காலோ பொன்சேகா காலமானார். உடல் ராகம மருத்துவ பீடத்திற்கு.

புகழ்பெற்ற மருத்துவரும் மருத்துவப் பேராசிரியருமான காலோ பொன்சேகா அவர்கள் தனது 86 வது வயதில் இன்று நண்பகல் அன்னாரில் வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார்.

அன்னாரது உடலம் அவரின் விருப்பிற்கிணங்க இறுதி மரியாதைகளின் பின்னர் ராகம மருத்துவ பீடத்திடம் கையளிக்கப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

களனி பல்கலைக் கழகத்தின் மருத்துவபீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்ட அவர் இலங்கை வைத்திய சபையின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

ட்ரொக்சிய வாதியான பேராசிரியர் லங்கா சம சாமாஜ கட்சியின் ஊடாக தீவிர அரசியலில் ஈடுபட்டதுடன் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஆவார்.

இலங்கையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு எதிரான திடமான கொள்ளை கொண்டிருந்த பேராசிரியர் காலோ பொன்சேகா 1980 களில் இதற்கு எதிராக பெருமெடுப்பிலான போராட்டங்களில் ஈடுபட்டவர்.

மருத்துவ துறையிலன்றி கலைத்துறையிலும் மிகுந்த ஆர்வம் காட்டிய அவர் ஓர் இசையமைப்பாளர் என்பதுடன் பல்வேறு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment