Friday, September 6, 2019

ஐக்கிய தேசியக் கட்சிக் காரியாலயத்திற்கு வேலை தருகின்றேன் என அழைத்து வேலை எடுப்பு! விஜயகலாவின் சகாவின கைவரிசை!

யாழ் ஐ.தே.கட்சி காரியாலயத்திற்கு அரசாங்க வேலைவாய்ப்பு பெற்றுத்தருகின்றேன் என அழைக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலாவின் சகாக்களில் ஒருவரின் காம இச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சித்தங்கேணிச் சந்தியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கிளையில் வைத்து வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 9ம் பிரிவு உறுப்பினரான விஜி மருகன் என்பவரால் இக்கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. குறித்த கிளைக்கு இரவு நேரங்களின் சந்தேகத்திற்கிடமான முறையில் இளம் பெண்கள் சென்றுவருதை அவதானித்த பிரதேச இளைஞர்கள் திடீரென காரியாலயத்தை சுற்றிவளைத்தபோது குறிந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அங்கு நுழைந்த இளைஞர்கள் அலங்கோல நிலையில் நின்ற மேற்படி அரசியல்வாதியின் கைங்கரியத்தை அம்பலப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவமானது உள்ளுர் தொலைக்காட்சிகள் மற்றும் சில இணையத்தளங்களில் செய்தியாக வெளிவந்துள்ளதையடுத்து பாதிக்கப்பட்ட பெற்றோரின் வேண்டுதலின் பெயரில் சில இணையங்கள் வெளியிட்ட செய்தியை நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



இலங்கையின் பொருளாதார நிலையில் வேலைவாய்ப்பு என்பது அத்தியாவசியமாகின்றது. இந்நிலையில் வேலை தேடிச் செல்கின்றபோது அரச பலம்கொண்டோர் நலிவுற்ற , பலவீனமான மக்களை இவ்வாறு தமது இச்சைகளுக்கும் பிறதேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்வது மிகக்கண்டனத்திற்குரியதாகும்.

வேலைவாய்புப்பு தருகின்றேன் என விஜயகலாவால் அழைக்கப்பட்ட பெண்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பகலில் விஜயகலா நேர்முகப்பரீட்சைக்கு என அழைத்து அவர்களிடம் விண்ணப்பப்படிவங்களை பெறுவதுடன் அடுத்த தேர்தலுக்கான பரப்புரைகளை மேற்கொள்கின்றார். இரவில் அவரது சகாக்கள் விண்ணப்பப்படிவங்களிலுள்ள தொலைபேசிக்கு அழைத்து தமது காரியத்தை மேற்கொள்கின்றனர்.



விஜயகலாவின் நோர்வே ஊடக ஆலோசகர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு தற்போது இலங்கையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியுள்ள „ஊத்தை" என செல்லமாக அழைக்கப்படும் ஒருவனாலும் இவ்வாறு பல பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.






No comments:

Post a Comment