Thursday, September 12, 2019

காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

மேல் மாகாணம், சபரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், வட மாகாணம், மற்றும் வட மத்திய மாகாணம் என்பன கடும் மழை மற்றும் மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் இவ்விடயம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலானது, நாளை முற்பகல் 9.00 மணி வரை செல்லுபடியாகும் எனவும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலில் பொது மக்களின் பாதுகாப்புக் கருதி கீழ்வரும் விடயங்களிலும் அவதானம் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முற்றத்தில் அல்லது மரங்களின் கீழே அமர்ந்திருக்க வேண்டாம்.

வயல், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டுத் திடல்கள், நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் நிற்க வேண்டாம்.

வயர்களுடன் கூடிய தொலைபேசிகள், மின் இணைப்புக்கள் என்பவற்றை உபயோகிக்க வேண்டாம்.

துவிச்சக்கரவண்டி, ட்ரக்டர்கள், படகுகள் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

கடும் மழை காரணமாக மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் என்பன சரிந்து விழலாம் என்பதனால், அவை தொடர்பில் மிகவும் அவதானமாக இருங்கள்.

அவசர நிலைமைகளில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment