Thursday, September 26, 2019

கோத்தாவை வெற்றிபெறச் செய்ய வெளிநாட்டில் உள்ள இலங்கையர் வருகை...!

'தாய்நாட்டைப் பாதுகாப்போம் கோத்தாவை வெற்றிபெறச் செய்வோம் - நவம்பர் 16 தேர்தலுக்காக இலங்கை செல்வோம்' எனும் கருப்பொருளில், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக இலங்கையில் வாக்குரிமையுள்ள வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இரண்டு இலட்சம் இலங்கையர்களையும் இலங்கைக்கு வரவழைப்பதற்கான விஷேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்ற 22 ஆம் திகதி பாரிஸ் நகரில் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, பிரான்ஸ் - பரிஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றிய பேராசிரியர் சன்ன ஜயசுமன, இதற்கு முன்னர் ஒருபோதும் தேர்தல்களுக்கு இந்தளவு விருப்பம் வெளிநாட்டில் இருக்கும் எவரும் காட்டவில்லை எனவும், குறைந்தளவு இரண்டு இலட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக இலங்கை வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment