Monday, September 30, 2019

கோத்தாவை கைது செய்ய அரசு கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றது. சாடுகின்றார் டளஸ் அழகப்பெரும.

பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு குற்றஞ் சுமத்திய அவர், கோத்தபாய ராஜபக்ச தற்கொலைப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துக்கொண்டு தனது உயிரை துச்சமென மதித்து பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு வழிகாட்டுதல்களை மேற்கொண்டு கொண்டிருந்தபோது எவரும் அவருடைய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் பிரஜாவுரிமை தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருக்கவில்லை.

அனால் அன்றிருந்த பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து மக்களை விடுவித்து ஜனநாயகத்தை நிலையாட்டியமையால் இன்று அவர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளது. இவ்வாராத்திற்கான ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையைப் பாருங்கள். சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டாவது நிலை வகிக்கின்ற சொலிசிற்றர் ஜெனரல் அவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து கோத்தாவை போலிக்குற்றச்சாட்டுகளில் கைது செய்வதற்கு எவ்வாறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றார்கள் என்பதை அவர் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் ஊழல் மற்றும் மோசடி ஒழிப்பு பிரிவின் தலைவியாக செயற்பட்ட டில்றுக்ஷி டயஸ் அவர்கள் தனக்கு மீது எவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது என தெரிவிக்கும் ஒலிப்பதிவுகளை கேளுங்கள். இவற்றினூடாக இந்த அரசாங்கம் எதிரிகளை பழிவாங்குவதற்கு நேரத்தை செலவிட்டுள்ளதேதவிர மக்களுக்கும் நாட்டுக்கும் எதுவும் செய்யவில்லை.

எனவே இரண்டு சீமெந்து பக்கெட்டுக்கள் வேண்டுமாக இருந்தால் சஜித் பிறேமதாஸவிற்கு வாக்களியுங்கள் சிறந்ததோர் நாடுவேண்டுமாக இருந்தால் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள் என்றும் வேண்டினார்.

No comments:

Post a Comment