Tuesday, September 3, 2019

படகு பயணம் மூலம் அவுஸ்ரேலிய செல்வது பயனற்றது.- மேஜர் ஜெனரல் க்ரெய்க் பியூரினி

அவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளின் பிரகாரம், படகுகளின் ஊடாக சட்டவிரோதமாகப் பயணஞ்செய்பவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்வதற்கோ அல்லது தொழில் புரிவதற்கோ ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவுஸ்திரேலியா எச்சரித்திருக்கிறது.

சட்டவிரோத படகுமூல பயணம் என்பது அர்த்தமற்றதும் ஆபத்தானதும் எனும் அதேவேளை, தமது நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறுவதற்கான எவ்வித வாய்ப்புக்களும் இல்லை என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சுயாதிபத்திய எல்லைகள் என்ற திட்டத்தின் பொறுப்பதிகாரயான மேஜர் ஜெனரல் க்ரெய்க் பியூரினி இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அவர், அங்கு ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment