Monday, September 2, 2019

மனித உரிமைகள் ஆணையாளருக்கு எதிராக ஐ.நா வில் முறையிடுகின்றது உலக இலங்கையர் பேரவை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மிகைல் பக்லட் இலங்கையின் இறையாண்மையை நிராகதித்து உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக உலக இலங்கையர் பேரவை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் அந்தோணியோ குட்ரெரஸ் இடம் முறையிட்டுள்ளது.

இலங்கையின் இராணுவத் தளபதி நியமன விடயத்தில் நேரடியாக மனித உரிமைகள் பேரவையின் தலைவர் தலையிட்டுள்ளதாகவும் அச்செயற்பாடான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் முரணானது என்றும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இணை அனுசரணை வழங்கியமையானது இலங்கையின் நீதிக்கு முரணானது என்றும் அவ்வாறு இணை அனுசரணை வழங்குவதாயின் அதற்கு நாட்டின் ஜனாதிபதியே கையொப்பம் இடவேண்டும் என்றும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment