Thursday, September 26, 2019

இழுபறி முடிவுற்றது. ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ. சின்னம் அன்னம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பான வேட்பாளர் நியமன விடயத்தில் நிலவிவந்த இழுபறி சற்றுமுன்னர் முடிவுக்கு வந்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தமது கட்சியின் வேட்பாளராக சஜித் பிறேமதாஸவை நிறுத்துவது என்ற முடிவை எட்டியுள்ளதுடன் அம்முடிவை சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் 3 விசேட நிபந்தனைகளுடன் சஜித் பிறேமதாஸவிற்கு சந்தர்ப்பம் வழங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கட்சியின் தலைவராக செயற்படுவார், தேர்தலில் வெற்றிபெற்றால் 6 மாதங்களினுள் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்து பிரதமருக்கு அதிக அதிகாரங்களை வழங்கவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் மேற்படி வேட்பாளர் நியமனம் இடம்பெற்றுள்ளது.

ஆனால் அவ்வாறான எந்தவொரு நிபந்தனைகளையும் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என சஜித் பிறேமதாச தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சி அன்னம் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக முடிவு செய்துள்ளனர். கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களையும் அவர்கள் அன்னம் சின்னத்திலேயே போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment