Friday, September 6, 2019

ஐதேக-ஸ்ரீசுக பாராளுமன்ற உறுப்பினர்களிற் சிலர் தாமரை மொட்டுடன் கைேகார்க்கின்றனர்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிற் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ள உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் பெரும்பாலும் அந்தப் பேச்சுவார்த்தைகள் திருப்தியுடையனவாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கேற்ப, எதிர்வரும் சில நாட்களில் தங்களது முன்னணியுடன் அவர்கள் வந்து சேர்வார்கள் எனவும், இவ்வேளை மக்கள் ஆதரவுக்கேற்ப, தங்களின் கட்சியுடன் பலரும் வந்து சேர்ந்தவண்ணமே இருக்கிறார்கள் எனவம் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment