Wednesday, September 25, 2019

பளையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தற்போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் தடுப்பில், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பளை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனின் வாக்கு மூலத்துக்கு அமைய கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் இது குறித்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சட்டவைத்திய அதிகாரி உள்ளிட்ட 7 பேர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமை அலுவலகத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இன்று நீதிமன்றில் இந்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

No comments:

Post a Comment