Wednesday, September 4, 2019

நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிப்பேன் - ரணில்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக தொடர்ந்தும் தான் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.

மாலைதீவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரதமர், மாலை தீவுப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டு்ளளார்.

19 ஆவர் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதி முறையின் பலமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக சென்ற வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் இதுதொடர்பில் பேசியிருந்தார் என்பதை இலங்கைநெட் சுட்டிக்காட்டியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment