Wednesday, September 25, 2019

இரண்டு நாட்கள் இலங்கை ஆசிரியர்கள் பணிபகிஸ்கரிப்பு

நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.

வேதன பிரச்சினைகள் உள்ளிட்ட ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதன் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தினங்களில் உயர் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விலக தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment