Tuesday, September 10, 2019

மரணதண்டனைக்கு 94 வீதமான யாழப்பாணத்தவர்கள் ஆதரவு

இலங்கையில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு 94 வீதமான யாழப்பாண மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர் என கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறுது.யாழ். கோட்டை முற்றவெளியில் தற்போது இடம்பெற்று வரும் என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா கண்காட்சியில், மரண தண்டனை தொடர்பான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகின்றது.

மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா இல்லையா என மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 94 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.

இந்த கண்காட்சி இடம்பெறும் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலக அலுவலக கூடத்தில் இக்கருத்துக்கணிப்பு இடம்பெற்று வருகின்றது.இதற்கான பதிலை விசேட தொடுதிரையை (Touch Screen) பயன்படுத்தி வழங்குவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 07 முதல் நான்கு நாட்களாக இடம்பெற்றுவரும் இக்கண்காட்சி இன்றுடன் (10) நிறைவுக்கு வருகின்றது.

10,000 தொழில் முதலீட்டாளர்கள் உருவாக்கும் நோக்கில் யாழ். மண்ணில் இடம்பெறும் இக்கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment