Monday, September 23, 2019

அசாதாரண காலநிலை காரணமாக காலியில் 861 பேர் பாதிப்பு

காலி மாவட்டத்தில் நேற்று (22) பெய்த கடும் மழையினால் தற்போதைக்கு 07 பிரதேசய செயலகங்களில் 36 கிராம சேவகர் பிரிவுகளில் 861 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

பாதிப்புக்குள்ளாகிய குடும்பங்களின் எண்ணிக்கை 293 ஆகும்.

முழுமையாக சேதமடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 05 ஆகும். ஓரளவு சேதமடைந்தள்ள வீடுகளின் எண்ணிக்கை 41 ஆகும் எனத் தெரியவந்துள்ளது. பொல்அத்து மோதர ஆறு பெருக்கெடுத்துள்ளதனாலேயே பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கியதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment