எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தற்போது ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தங்களை இனங்காட்டிக் கொண்டு எந்த ஒருவருக்கும் 40% வாக்கு எல்லையை எட்ட முடியாயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
அதனால் எந்தவொரு நபரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதியாக வர இயலாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தற்போது துாதுவராலயத்துடன் பேச்சுவார்த்தை நடாத்திவருவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவ்வாறான பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு மேலும் பாராளுமன்றில் இருப்பது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்திற்கேற்ப எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதனால் எந்தவொரு நபரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதியாக வர இயலாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தற்போது துாதுவராலயத்துடன் பேச்சுவார்த்தை நடாத்திவருவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவ்வாறான பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு மேலும் பாராளுமன்றில் இருப்பது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்திற்கேற்ப எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment