Monday, September 23, 2019

அசாதாரண காலநிலை காரணமாக மாத்தறை - காலி மாவட்டப் பாடசாலைகளுக்கு 24, 25 ஆம் திகதிகளில் விடுமுறை

அசாதாரண காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) இரு தினங்களும் மூடுவதற்கு ஆவன செய்துள்ளதாக தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனியார் பாடசாலைகளும் கருத்திற் கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசாங்கத்தின் அறிவித்தல்களை தனியார் பாடசாலைகளும் கவனத்திற் கொள்வதே சிறந்ததெனவும் பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment