Monday, September 30, 2019

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான தகவல்களை பொது மக்கள் வழங்க முடியும்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல்களை வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான தகவல்களை கொழும்பு -7, முதலாம் மாடி, பிரிவு இலக்கம்-5, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கமுடியும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தகவல்களை அடுத்த மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

ஆணைக்குழு தனது பணிகளை ஆரம்பிக்கும் அடிப்படை நடவடிக்கையாக பொது மக்களிடம் தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளது. கிடைக்கப்பெறும் தகவல்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட விருப்தாகவும் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட விருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 21 ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தார்.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சனத் டி சில்வா இதன் தலைவராக செயற்படுகிறார்.

No comments:

Post a Comment