Friday, September 27, 2019

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாவுக்கு ஆதரவளிக்க 19 கட்சிகள் கைகோர்க்கின்றனவாம்.!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக, அரசியல் கட்சிகள் 19 கூட்டுச்சேரவுள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

எதிர்வரும் 05 ஆம் திகதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இவ்வனைத்துக் கட்சிகளும் கோத்தபாய ராஜபக்ஷ 'தாமரை மொட்டு'ச் சின்னத்தில் தேர்தலில் களம் குதிப்பதற்கு ஆதரவளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment