Friday, September 27, 2019

இலங்கையில் மதுவால் வருடம் 18 ஆயிரம் பேர் மரணம்

மது பாவனையால் வருடாந்தம் 18 ஆயிரம் பேர் நாட்டில் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் அனுலா விஜேசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை, மதுபானம், மற்றும் புகையிலை வர்த்தகம் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 143 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் எனினும், புகையிலை மதுபான பாவனையால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 209 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவித்த அவர், இதற்கிணங்க புகையிலை மற்றும் மதுபான வர்த்தகத்தினால் அரசாங்கத்திற்கு எந்த வித வருமானமும் கிடைப்பதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாகன விபத்துக்களால் வருடாந்தம் மூவாயிரம் பேர் மரணமடைவதுடன் 25ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கவீனமாகின்றனர். இதற்கிணங்க மதுபாவனையே வீதிவிபத்துக்களுக்குக் காரணமாகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் மதுபாவனையைப் பொறுத்தவரை ஒருவர் 3.5லீட்டர் மதுபானத்தை அருந்துவதாகவும், அதனால் ஏற்படும் சிரோசிஸ் நோயினாலேயே நாட்டின் அதிகளவு மரணங்கள் பதிவானதாகவும் உலகில் இது இரண்டாவது இடத்தை வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment