Thursday, August 8, 2019

ஆங்கிலம் கற்பிக்க அமெரிக்க US Peace Corps என்ற அமைதிப்படை.

சிறிமாவோ பண்டாரநாயக ஆட்சிக்காலத்தில் இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட US Peace Corps என அறியப்பட்ட அமெரிக்க அமைதிப்படை நாட்டினுள் மீண்டும் நுழையவுள்ளதாக அறியமுடிகின்றது. இது தொடர்பாக நாட்டின் கல்வியமைச்சர் அகிலவிராஜ் மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

இன்று 8 இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் இலங்கை பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிப்பது தொடர்பில் விரிவாக பேசப்பட்டுள்ளது:

எது எவ்வாறாயினும் அமெரிக்கர்கள் தமது கொள்கைகளை பரப்புரை செய்வதற்கும் புலனாய்வுத் தகவல்களை இலகுவாக தேடிக்கொள்வதற்கும் மேற்படி அமைதிப்படை முறையை கையாண்டுவருகின்றனர் என்பது பல்வேறு தரப்பாலும் வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.

இலங்கையினுள் முற்றாக கால்பதிக்க முனையும் அமெரிக்கா தனது சகல பலத்தினையும் அதற்காக பயன்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment