Friday, August 9, 2019

சில மதகுருமார்கள் ஒன்றிணைந்து, குண்டர்களை சிம்மாசனத்தில் ஏற்றுவதற்கு முனைகிறார்கள் - பேராசிரியர் சரத் விஜேசூரிய

சில மதகுருமார்கள் ஒன்றிணைந்து, குண்டர்களை சிம்மாசனத்தில் ஏற்றுவதற்காக ஆவன செய்துவருகிறார்கள் என பேராசிரியர் சரத் விஜேசுந்தர குறிப்பிட்டார். சிலர் தங்களுடைய அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதற்காக தாங்கள் சேர்த்த பணத்திலிருந்து அச்சாறு போன்று தங்கள் சமயத்திற்காக - மதத்திற்காகப் பயன்படுத்துவது தெரிகிறது எனவும் அவர்

மதகுருமார்களின் கண்களில் மண்ணைத் துாவிவிட்டு, ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வதில் அவர்கள் மிகத் திறமைசாலிகளாக இருக்கிறார்கள் எனவும், பேராசிரியர் சரத் விஜேசுந்தர அவர்கள் கொழும்பு பண்டாரநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது குறிப்பிட்டார்.

தேசியத் தலைவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டியது ஜனநாயகத்தைப் பலமாக்குவதேயன்றி வேறில்லை எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment