Monday, August 19, 2019

யார் என்னசொன்னாலும் சிங்கள இனம் இரண்டுபட்டே தீரும்.. அது பெரியதொரு துரதிர்ஷ்டமே! தம்மானந்த தேரர்

மகா சங்கத்தினரின் பேச்சைக் கேட்டு, முடிவுகளை எடுத்து நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் புனித மெதகம தம்மனந்த தேரர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மா ஓயா ஸ்ரீ விஜய சுனந்தரமய சிலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் தேரர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இம்முறை சிங்களவர்கள் இரண்டுபடுவார்கள் என்றும் அவர்கள் சிறுபான்மையினரின் உதவியுடன் அரசாங்கம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் தேரர் மேலும் கூறினார்.

அதற்காக தேவையான சட்டங்கள் இப்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குண்டுவெடிப்பு மற்றும் பல்வேறு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், நாங்கள் இன்னும் பாதுகாப்பாக இருக்கிறோமே என்றும் புனித தேரர் சுட்டிக்காட்டினார்.

மதகுருமார்கள் தங்களாலான முழுப் பங்களிப்பையும் நல்கக் காத்திருப்பதாகவும் மகா சங்கத்தின் பேச்சைக் கேட்டு நடக்கும்படியும் மெதகம தம்மானந்த தேரர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment