Friday, August 9, 2019

ஜனாதிபதி நானானாலும் மஹிந்ததான் அத்தனையும்! கூறுகின்றார் கோத்தா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என்னை ஜனாதிபதியாக நியமித்தால், நாட்டின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் கவனிப்பதற்காக நான் மகிந்த ராஜபக்ஷவை நியமிப்பேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை அபிவிருத்தியின்பால் கொண்டு செல்லுதல், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கரிசனை காட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் வீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடலின்போதே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment