Saturday, August 31, 2019

ரணில் இருந்தது போதும் - உபுல் ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமாயின் கட்டாயம் இரண்டாம் தரப்பினருக்கு அவகாசம் வழங்க வேண்டும் என ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குறிப்பிடுகின்றார்.

ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் மூலம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்வது, வேட்புமனுவின் பின்னர்தான் என ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளமையானது வஞ்சகச் செயலாகும் என சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குறிப்பிடுகிறார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தற்போது பொதுமக்களில் பத்துப் பேரிடம் அல்ல, நுாறு பேரிடம் கேட்டாலும் எல்லோரும் ஒருமித்த குரலில் 'ரணில் நின்றது போதும்.... போதும்' என்றே கூறுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment