Tuesday, August 13, 2019

கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எதுவும் சொல்லமுடியாதாம்... கைவிரிக்கிறது அமெரிக்கத் துூதரகம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்கக் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளமை உண்மையானதுதானா என இந்நாட்டு அரசியலாளர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் வினவிய வினாவுக்கு விடையளிப்பதற்கு அமெரிக்கத் துூதரகத்தின் பேச்சாளர் நென்சி மென்கொரின் மறுத்துள்ளார்.

ஒருவரின் தனிப்பட்ட விடயங்களை வெளியிடுவதற்குஅமெரிக்காவின் சட்ட திட்டங்களின் இடமில்லை எனக் குறிப்பிட்ட அவர், கேள்விக்கு விடையளிக்காமைக்கான முதலாவது காரணமே அதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரும், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டாளர் ஒருவரும் பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை வழங்கி, காேத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை இரத்து தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரியுள்ளனர்.

என்றாலும், அமெரிக்க துூதரகத்திலிருந்து இது தொடர்பில் தகவல் பெறுவதற்கும் விசாரிப்பதற்கும் தங்களுக்கு உரிமை இல்லை என பொலிஸ் மேலிடத்தைச் சேர்ந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments:

Post a Comment