Thursday, August 22, 2019

இந்திய முன்னாள் நிதி அமைச்சர் சிதரம்பரத்தை சிஐபி கைது செய்துள்ளது

இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) அதிகாரிகளால் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) கைது செய்தது. கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை நாளை ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் CBI அதிகாரிகள் ஆஜர்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்பிணை மறுக்கப்பட்ட நிலையில் ப.சிதம்பரத்தை CBI அதிகாரிகள் கைது செய்தமையினால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment