Saturday, August 31, 2019

ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் என்பது உறுதி...! சஜித் சுயேட்சை வேட்பாளர்....

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் பொது ஜன ஐக்கிய முன்னணியினதும் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டு வெற்றிபெற்றால், அடுத்துவரும் அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷவும், பிரதமராக மகிந்த ராஜபக்ஷவும், சபாநாயகராக மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்படவுள்ளார்கள் என நம்பகத்தன்மை மிக்க வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

சென்ற ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் ஒன்றுகூடி நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அங்கு இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுதொடர்பில் பல்வேறு பிரிவினரும் அவ்வவ் கட்சிகளுடன் தொடர்புடைய துறைசார் நிபுணர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். பெரும்பாலானோர் இது பொருத்தமானதொரு முன்மொழிவே எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக இதுவரை பெயர் குறிப்பிடப்படாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி அபிலாசை இல்லாதொழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. எனவே, சஜித் பிரேமதாச சுயேட்சையாக போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய நெருங்கிய வட்டாரங்கள் அறிவிக்கின்றன.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்குத் தயாராக உள்ளார் எனவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment